நம்மாழ்வார் நம்மை விட்டு பிரிந்தார்
ரசாயன
உரங்கள் மண்ணிற்கு கேடு – “இயற்கை வேளாண் முறையே நமக்கும் மண்ணிற்க்கும் உயிர்” என்று
நம்பி
அதை வேளாண் பெருமக்களிடம் பரப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்தி அதை செய்தும் காட்டிய இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் "டிசம்பர் 30, 2013" அன்று அந்தியில், பட்டுக்கோட்டை அருகே அத்திவட்டியில் அவர் ரசித்த இயற்கையுடன் இணைந்தார்.
அவரை பிரிந்து
வாடும் “தமிழக
மண்”, “அவரது குடும்பத்தினர்” மற்றும் “வேளாண் பெருமக்கள்” அனைவருக்கும்
நமது ஆறுதலை செலுத்துவோம். அவரின் வழியில் நடந்து அவரின் கனவை நனவாக்குவோம்..
இயற்கை விவசாயத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்த ஒரு இயற்கை விரும்பி மண்ணின் மைந்தர் மண்ணில் சாய்ந்தது. இந்நாளில் ஒரு விவசாயியாது இயற்கை விவசாயம் செய்ய உறுதிமொழி எடுப்பின் அதுவே நாம் அவருக்கு செய்யும் மிகப் பெரிய அஞ்சலி. நம்மாழ்வாரின் ஆத்மா சாந்தி அடைய செய்வது நம் கையில் தான் உள்ளது.
ReplyDelete